Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலம் போயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பா. இவருடைய மனைவி எல்லம்மா (வயது 50). இவர், வீட்டின் போரில் இருந்து குடிநீர் எடுக்க மின்மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது அவரை, மின்சாரம் தாக்கியது.
அவரை, கலா என்ற பெண் காப்பாற்ற முயன்றார். கலாவையும் மின்சாரம் தாக்கியது. அதை கவனித்த அப்பகுதியினர் மின்சாரத்தைத் துண்டித்தனர். ஆனால் எல்லம்மா பரிதாபமாக உயிரிழந்தார். ரால்லபூடுகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.